யார்க்கெல்லாம் அரியர் தேர்வு ரத்து பொருந்தும் – முழு விளக்கம் உள்ளே !
இறுதி பருவ கல்லூரி தேர்வு தவிர, அரியர் உட்பட மற்ற அனைத்து கல்லூரி பருவ தேர்வுகளும் ரத்து என தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் நேற்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தமிழக மாணவர்கள் மத்தியில் பெரும் ஆரவாரமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இருத்தலாலும் இந்த அறிவிப்பால் யார்க்கெல்லாம் அரியர் தேர்வு ரத்து பொருந்தும் என்ற குழப்பம் எழுந்துள்ளது. அதை பற்றிய முழு விளக்கம் கீழே வழங்கி உள்ளோம்.
யார்க்கெல்லாம் அரியர் தேர்வு ரத்து பொருந்தும்:
- தமிழகத்தில் கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும், எத்தனை அரியர் வைத்திருந்தாலும் தேர்வு கட்டணம் செலுத்தி, தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தால் தேர்வு எழுதுவதில் விலக்கு. தேர்வு எழுத தேவையில்லை. அதாவது அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
- அனைத்து கல்லூரி மாணவர்களும் அரியர் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தியிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.
- இறுதி பருவத்தேர்வைத் தவிர பிற செமஸ்டர்களில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது
- கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொறியியல், கலை மற்றும் அறிவியல் மாணவர்கள் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியிருந்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இறுதி செமஸ்டர்களில் உள்ளவர்கள் தவிர அனைத்து மாணவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
-
பாலிடெக்னிக் படிப்புகளில் உள்ள மாணவர்களுக்கும், இறுதி செமஸ்டர் தேர்வுகளைச் சுற்றியுள்ள அதே நிபந்தனையுடன் கணினி பயன்பாடுகளில் முதுநிலை (MCA) படிப்பவர்களுக்கும் மாநில அரசு விலக்கு அளித்தது.
-
இந்த ஆண்டு நிலுவைத் தொகையை எழுத பதிவு செய்யாதவர்களின் நிலை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சான்றிதழ் பதிவேற்றத்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு – அமைச்சர் வாய்ப்பு