சென்னை மெட்ரோ ரயில் சேவையில் ஏற்படவுள்ள மாற்றம்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!
சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும், படிப்படியாக சேவை நீட்டிக்கப்பட்டு, தற்போது பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் “சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையான 15.46 கி.மீ தொலைவு மெட்ரோ ரயில் வழித்தட விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில்வேயில் Trade Apprentice வேலைவாய்ப்பு – 1000+ காலிப்பணியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
மேலும், இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அனுமதி வழங்கிய பின்னர் இந்த வழித்தடத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது”.
























