தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்காக பயிற்சிக்கு செல்ல உள்ளதால் 9 முதல் 11ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் ஜனவரி 19ம் தேதி முதல் திறக்கப்பட்டது. 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரியிலும், 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 9 முதல் 11ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – என்ஐஓஎஸ் அங்கீகாரம்!!
தேர்தல் அறிவிப்பு:
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வழக்கமாக தேர்தல் பணிகளில் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்காக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பட்டியல் தயாராகி விட்டது. தேர்தல் பணிகளுக்கான பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு தொடங்கி விட்டது.
கோடை விடுமுறை:
தேர்தல் பணிகளில் பொதுவாக பெரும்பாலான உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தான் நியமிக்கப்படுவார்கள். தற்போது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைளையும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு தரப்பிலும் பாதிக்கப்டுகின்றனர். தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்