தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – என்ஐஓஎஸ் அங்கீகாரம்!!
என்ஐஓஎஸ்:
தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் (NIOS) இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியமாகும். ஊரகப்பகுதிகளில் கல்வியறிவை அதிகரிக்கும் வகையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) & இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (CISCE) போன்றே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது.
தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் அவசியம்!!!
அங்கீகாரம்:
திருவள்ளுவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2017ல் அளிக்கப்பட்ட தீர்ப்பின் படியும், அனைத்து வகை பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் பெற்று செயல்பட வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி சான்றிதழ் தகுதியற்றதாகி விடும்.
சென்னை பள்ளி:
சென்னை மதுரவாயல் கங்கையம்மன் நகரில் உள்ள, வி.என்.ஆர்.விவேகானந்தா வித்யாலயா பள்ளியானது தமிழக பள்ளிக்கல்வித்துறை இணைப்போ அல்லது சிபிஎஸ்சி வாரியத்தின் அங்கீகாரத்தையோ பெறவில்லை. ஆனால் இந்த பள்ளியானது பள்ளி மத்திய கல்வி மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய திறந்த நிலை பள்ளி அமைப்பான, என்.ஐ.ஓ.எஸ்., அங்கீகாரம் பெற்றதாக, உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பள்ளிக்கு செல்லாத 14 வயதுக்கு உள்பட்ட மாணவர்களை மட்டும் இந்த பள்ளியில் சேர்க்கலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்