தமிழகத்தில் அரசு ஏசி பேருந்துகள் இயக்கம் – வரவேற்கும் பயணிகள்.. அதிகரிக்கும் முன்பதிவு!
தமிழகத்தில் தற்போது நிலவும் கோடை காலத்தில் மக்கள் அதிக அளவு ஏசி பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏசி பேருந்துகளை இயக்கி வருகிறது.
ஏசி பேருந்துகள்:
தமிழகத்தில் தற்போது வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இந்த காலநிலையில் பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது ஏசி பேருந்துகளையே தேர்ந்தெடுக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு தேவையான வசதிகளுடன் ஏசி பேருந்துகளை இயக்கி வருகிறது.
ஆதார் துறையில் உங்களுக்காக காத்திருக்கும் நிரந்தர பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தனியார் ஏசி பேருந்துகளை விட அரசு ஏசி பேருந்துகளில் கட்டணம் மிகக் குறைவு என்பதால் மக்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளிலேயே பயணம் செய்ய முன் பதிவு செய்து வருகின்றனர். தற்போது வார இறுதி நாட்களில் சுமார் 3000 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், தற்போது கொளுத்தும் வெயிலில் ஏசி பேருந்துகள் இயக்கம் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு வரும் ஜூன் மாதம் வரை ஏசி பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்துகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் பயணிகள் 94430 14448 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.