மகிழ்ச்சியளிக்கும் ஆபரணத்தங்கத்தின் விலை – நகைகள் வாங்கும் ஆர்வத்தில் மக்கள்!

0
மகிழ்ச்சியளிக்கும் ஆபரணத்தங்கத்தின் விலை - நகைகள் வாங்கும் ஆர்வத்தில் மக்கள்!
மகிழ்ச்சியளிக்கும் ஆபரணத்தங்கத்தின் விலை - நகைகள் வாங்கும் ஆர்வத்தில் மக்கள்!
மகிழ்ச்சியளிக்கும் ஆபரணத்தங்கத்தின் விலை – நகைகள் வாங்கும் ஆர்வத்தில் மக்கள்!

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (பிப்.22) எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது. தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இல்லாததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை:

இந்தியாவில் தங்கத்தின் விலையானது 2023 – 2024 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏனெனில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் நகைகள் வாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த மாதத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ. 5000க்கும் மேலும் ஒரு சவரன் ரூ . 43,000 – ஐ கடந்தும் விற்பனையானது.

ராணுவத்தில் பணியாற்ற புதிய நடைமுறை – விண்ணப்பிக்க முழு விவரம் இதோ!

Follow our Instagram for more Latest Updates

இந்த விலை உயர்வால் தங்க நகைகள் வாங்குவது என்பது இல்லத்தரசிகளுக்கு ஒரு சவாலான காரியமாகவே இருந்து வருகிறது. நாள்தோறும் மாற்றமடைந்து வரும் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து நகைகள் வாங்க திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (பிப்.22) தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமில்லை.

ஆபரணத்தங்கம் நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது. அதன் படி ஒரு கிராம் ரூ. 5,275க்கும் ஒரு சவரன் ரூ. 42,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று வெள்ளியின் விலை எதிர்பாராத விதமாக ஒரு கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!