10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு – அரசு தேர்வுத்துறை இயக்குனர்!!
பொதுத் தேர்வுகள்:
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பொதுவாக தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை கல்வி ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து சேகரிக்க தொடங்கி தேர்வுக்கு 2 மாதங்களுக்கு முன்னதாகவே தமிழக அரசின் தேர்வுத் துறையில் பதிவு செய்து விடுவார்கள். நடப்பு ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கினால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட காரணத்தால் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யும் பணி தாமதாமாக தொடங்கியது.
தாமதமான பணிக்கொடைக்கு 6% வட்டி வழங்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!
அரசு தேர்வுத் துறை:
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை பள்ளிகள் மூலமாக அரசு தேர்வுத்துறை பதிவு செய்து விட்டது. தொடர்ந்து 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை பிப்ரவரி 1 முதல் 12ம் தேதியான இன்றைக்குள் சேகரித்து ஆன்லைனில் பதிவு செய்யும் பணியினை முடிக்குமாறு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. பெரும்பாலான பள்ளிகள் இந்த பணியினை இன்னும் முடிக்கவில்லை.
TN Job “FB Group” Join Now
காலஅவகாசம் நீட்டிப்பு:
மாணவர்களின் விவரங்களை பள்ளிகள் பதிவு செய்யாத காரணத்தால் தேர்வுக்கான கட்டணத்தையும் செலுத்த முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் தமிழக தேர்வுத்துறை மாணவர்களின் விவரங்களை பதிவு செய்வதற்கும், தேர்வு கட்டணத்தை செலுத்துவதற்கும் மேலும் ஒரு வாரம் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதன்மூலம் பிப்ரவரி 18 ம் தேதி வரை 10,11ம் வகுப்பு மாணவர்களின் விவரம் பதிவு மற்றும் தேர்வு கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்