தாமதமான பணிக்கொடைக்கு 6% வட்டி வழங்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை:
தமிழக போக்குவரத்து துறையின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடிந்த பின்னர் அவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும். முன்னதாக தமிழக அரசுக்கும், போக்குவரத்து துறை பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு தொடர்பாக பலமுறை பிரச்சனைகள் வந்தது. அப்போது தமிழக அரசு ஊழியர்கள் கேட்ட சதவீதத்தை விட குறைவாகவே ஊதியத்தை உயர்த்தியது. இதனால் இரண்டு தரப்புக்கும் இடையில் அவ்வப்போது பிரச்சனைகள் வெடித்த வண்ணம் தான் உள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கையில் மொழி திணிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!
ஓய்வூதியம்:
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 11 பேர் ஓய்வூதியம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தனர். அதில், ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் தாங்கள் ஓய்வு பெற்று இரண்டு மாதங்களுக்குள் சட்டப்படி, தங்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்கள் வழங்காததால் அதற்கு 10% வட்டி வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தனர்.
TN Job “FB Group” Join Now
நீதிமன்ற தீர்ப்பு:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அவர்கள் வழக்கின் தீர்ப்பை வழங்கினார். அதில், தாமதமாக வழங்கப்பட்ட ஓய்வு கால பணப்பலன்களுக்கு 6% வட்டியை ஆறு தவணைகளாக வழங்க வேண்டும் என்று முன்னதாக வேறு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது நடக்கும் இந்த வழக்கிலும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அதே 6% வட்டியை அரசு வழங்க வேண்டும். வட்டி தொகையை மார்ச் 1ம் தேதியில் இருந்து ஆறு மாத கால தவணைகளாக வழங்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டியை வழங்க தவறினால் 10% வட்டி சம்பந்தபட்ட அதிகாரி வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்