ஆகஸ்டில் பொறியியல் கலந்தாய்வு – உயர்கல்வித்துறை முடிவு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப கலந்தாய்வானது ஒவ்வொரு வருடமும் நடைபெறும். இந்த முறை கொரோனா வைரஸினால் அந்த கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் இந்த கலந்தாய்வு நடத்தலாம் என உயர்கல்வித்துறை கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கீழ் வழங்கப்பட்டுள்ளது. அவை
- கலந்தாய்விற்கான விண்ணப்பத் தேதியினை ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
- முதல் சுற்று கலந்தாய்வினை ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதிக்குள்ளாகவும், அடுத்த சுற்று கலந்தாய்வினை செப் 10 அன்றுக்குள்ளும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இதிலும் நிரம்பாத இடங்களுக்கு செப் 15 அன்றுக்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்க வேண்டும்.
- அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகளை வரும் செப் 16 அன்று தொடங்க வேண்டும்.
நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வினை ஆகஸ்ட் மாதத்தில் முடித்து விட வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு குறிப்பிடத்தக்கதாகும்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |