தமிழகத்தில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் மே மாதம் 2 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அதன்படி வாக்கு எண்ணிக்கை நாளன்று வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொண்டாட்டத்திற்கு தடை
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்த நிலையில் மே மாதம் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளான ஞாயிற்று கிழமை அன்று மாநிலம் முழுவதும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்கு எண்ணிக்கை நாளன்று கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!
இந்த வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு சார்பில் வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படுத்தப்படவுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை திருப்தியளிக்கக்கூடிய நிலையில் இருப்பதால் அதனை பின்பற்ற அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் ஊடகங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெற்றி சான்றிதழை பெறுவதற்கு வேட்பாளருடன் இருவர் மட்டுமே செல்ல வேண்டும் என கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தவிர வாக்கு எண்ணிக்கையின் போது தலைவர்கள், தொண்டர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மே 2 ஆம் தேதி வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் பட்டாசுகள் வெடிப்பது, ஊர்வலம் நடத்துவது மற்றும் பேரணி செல்வது போன்ற செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை கண்டிப்பாக அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.