நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

0
நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் எதிர்பார்த்ததை விட அதிகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் நீட்டிப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை எதிர்பார்த்ததை விட அதிக வீரியத்தில் பரவி வருவதே இதற்கு காரணம். தொற்றின் பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறது. மாநிலங்களில் உள்ள பாதிப்பு நிலவரத்தைப் பொறுத்து கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக கட்டணம் குறைப்பு – முதல்வர் அறிவிப்பு!!

இந்த உத்தரவை அடுத்து பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும் டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மே மாதம் 31ம் தேதி வரை நீடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும், இந்த உத்தரவுகளை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களும் பின்பற்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 10% மேல் பாதிப்பு உள்ள பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், இதே போல் 60% வரையிலான படுக்கைகள் நிரம்பிய மருத்துவமனைகள் குறித்து தகவல்களை சேகரிக்கவும், அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!