கொரோனா பரிசோதனைக்காக கட்டணம் குறைப்பு – முதல்வர் அறிவிப்பு!!
அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனாவிற்கான பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த கட்டண குறைப்பு இன்று முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதனை அடுத்து இந்த பரவலை கட்டுப்படுத்த பல விதமாக தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வருகின்றது. பொது மக்கள் கொரோனாவின் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.
மே 1ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது – மாநில அரசு அறிவிப்பு!!
இதற்காக தற்போது கேரள அரசு கொரோனா பரிசோதனைகளுக்கான கட்டணத்தை குறைத்துள்ளது. முன்னதாக, கேரளாவில் 2100 ரூபாய்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. பின், ஜனவரி 1 ஆம் தேதி முதல் 1500 ரூபாய்க்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்ததனை அடுத்து விலை 1700 ரூபாய் ஆக குறைக்கப்பட்டது. பின், தற்போது இந்த விலை ரூ.500 என்று குறைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தனியார் மருத்துவ ஆய்வகங்களுக்கு பொருந்தும் என்றும், அரசு ஆய்வகங்களில் இலவசமாகவே பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் ரூ. 1200 முதல் ரூ. 800 என்ற கட்டணத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்