மே 1ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது – மாநில அரசு அறிவிப்பு!!
மத்திய அரசு அறிவித்த படி நாடு முழுவதும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் நாளை தடுப்பூசி போடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. அதன்படி கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. முன்னதாக கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா முன்கள பணியாளர்கள், மருத்துவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தவிர மார்ச் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
CMC Vellore வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
இந்நிலையில் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமடைந்து வருகிறது. மத்திய அரசின் அறிவிப்பின்படி மே மாதம் 1 ஆம் தேதி முதல் தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் அறிவித்தபடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து அவர் கூறுகையில், ‘தடுப்பூசி போடுவதற்காக 1 கோடி டோஸ்கள் வழங்கும்படி சீரம் நிறுவனத்திடம் ஆர்டர் செய்திருந்தோம். ஆனால் கொரோனா தடுப்பூசிகள் இன்னும் கிடைக்கவில்லை. எனவே கர்நாடகாவில் நாளை தடுப்பூசி போடப்படாது. அதனால் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட நபர்கள் யாரும் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம்’ என தெரிவித்துள்ளார்.