அதிரடியாக குறைக்கப்படும் பாடத்திட்டம்…!! பாடநூல் கழகம் வெளியிட்ட முக்கிய தகவல்…!!
தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்தின் போது ஆன்லைன் வகுப்பில் படிக்க தொடங்கியதில் இருந்தே மாணவர்களின் கற்றல் திறன் கடுமையாக பாதிக்க தொடங்கியது. இதனால், மாணவர்களுக்கு கற்றல் சுமை அதிகரித்து மன அழுத்தம் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம்..! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!
அதாவது, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடத்திட்டம் 40% வரை குறைக்கப்படும் எனவும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு முறையே 238,236,228 பக்கங்களுடன் கூடிய புத்தகம் வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும்” என பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், இது மாணவர்கள் முழு பாடத்திட்டத்தையும் படிக்க சிரமப்படுவதால் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























