தமிழகத்தில் இன்று 139 பேருக்கு கொரோனா உறுதி – சிகிச்சையில் 777 பேர்!!
தமிழகத்தில் இன்று (மார்ச் 31) ஒரே நாளில் சுமார் 139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தவிர தற்போது 777 பேர் சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் அடுத்த அலை உருவாகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், பல மாதங்களுக்கு பிறகு நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு வரும் கொரோனா பரவலின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை தினசரி 100 ஐ தாண்டி பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய எண்ணிக்கை மக்களிடையே மீண்டும் அச்சுறுத்தலை உருவாக்கி இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Free Online Test!
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் சுமார் 139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 88 பேர் சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியதாகவும், 777 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் உட்பட அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.