தமிழகத்தில் 20,000 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!
தேசிய தொழில் சேவை மூலம் தமிழ்நாடு, கோவை மாவட்டத்தில் மிகப் பெரிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் பற்றிய விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற வாழ்த்துகிறோம்.
வேலைவாய்ப்பு முகாம்:
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையம், மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் தேசிய தொழில் சேவை மூலம் இணைந்து நடத்தப்படுகிறது. 250க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள இந்த முகாமின் மூலம் 20000 மேற்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள், தங்களின் விவரங்களை முன்னதாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் 16.11.2022 முதல் 27.11.2022 காலை 9.00 மணி வரை தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
- வேலைவாய்ப்பு முகாம் தொடங்கும் தேதி/நேரம் : 27 நவம்பர் 2022/ 09:00 AM
- வேலைவாய்ப்பு முகாம் முடிவு தேதி/நேரம் : 27 நவம்பர் 2022 / 05:00 PM
- நடைபெறும் இடம்: மகாலிங்கம் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி கல்லூரி, பொள்ளாச்சி (மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோவை)
- பதிவு தேதி/நேரம்: : 16.11.2022 முதல் 27.11.2022 காலை 9.00 மணி வரை
- தகவல் தொடர்புக்கான அஞ்சல் ஐடி: [email protected]
- தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் பெயர்: செல்வராஜ்
- அலைபேசி எண்; 97901 99681