மாண்டாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் – தமிழக முதல்வர் இன்று ஆய்வு.. நிவாரணம் வழங்கப்படும் என உறுதி!
வங்கக்கடலில் உள்ள மாண்டாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஆய்வு:
வங்கக்கடலில் உருவான மாண்டாஸ்புயல் நேற்று (டிச.09) இரவு மாமல்லபுரம் மற்றும் ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கரையை கடந்தது. இந்த புயலால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு ஆளாகினர்.
Exams Daily Mobile App Download
இந்த புயல் கரையை கடக்கும் போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வரை பலத்த காற்று வீசியது. இதனால் கடற்கரை பகுதியில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த மாண்டாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அடுத்த 12 மாதங்களில் 3.64 லட்சம் வேலை வாய்ப்புகள் – அறிக்கையில் வெளியான தகவல்!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இன்று ஆய்வுக்காக காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்ற அவர் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டார். அங்குள்ள மீனவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதுவரை 4 பேர் புயலால் உயிரிழந்துள்ளனர். அதே போல 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளது என்று கூறினார். அதனை தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.