தமிழக மக்களின் குறைதீர்க்க ‘1100’ புதிய தொலைபேசி சேவை திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!!
குறைதீர்ப்பு:
பொது மக்கள் தங்கள் குறைகளை அரசுக்கு தெரிவித்து தீர்வு காணும் பொருட்டு அரசிடம் மனுக்களை கொடுப்பது வழக்கம். இதற்கான பதில் குறித்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட துறையிடம் விளக்கம் கேட்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. தற்போது நவீன தகவல் தொழிநுட்ப காலத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கையை தொலைபேசி வாயிலாக பதிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடங்கள் குறைப்பு – பள்ளிக்கல்வி அதிகாரிகள் தகவல்!!
முதல்வரின் புதிய திட்டம்:
பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசுக்கு தெரிவிப்பதற்காக தமிழ்நாடு மின்னாளுமை முகமையால், “முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்வு மேலாண்மை திட்டம்” என்ற புதிய திட்டத்தை முதல்வர் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். அதன்படி, 1100 என்ற தொலைபேசி எண் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், பொது தங்கள் குறைகளை தெரிவித்தால் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைக்கு பதிவு செய்யப்பட்டு குறைகள் தீர்க்கப்படும். புகார் அளித்தவருக்கு குறுந்செய்தி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்