தமிழகத்தின் 43வது தலைமை செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமனம்?? முதல்வர் திட்டம்!!
தமிழக அரசின் தலைமை செயலாளர் பதவிக்காலம் வருகிற 31 ஆம் தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைமை செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமை செயலாளர்:
தமிழக அரசின் 42வது தலைமை செயலாளர் சண்முகம் பதவிக்காலம் ஜூலை மாதம் இறுதியில் முடிவடைந்த நிலையில் 2 முறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதை அடுத்து வருகிற ஜனவரி மாதம் 31 ஆம் தேதி உடன் பணிக்காலம் முடிவடைந்ததை அடுத்து 43வது செயலாளர் நியமனத்திற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ் ராஜ் வர்மா உள்ளிட்ட பலர் போட்டியிட்டனர்.
மருத்துவ படிப்புகளுக்கான 7.5% இட ஒதுக்கீடு வழக்கு – தமிழக அரசு பதில்!!
இந்நிலையில் புதிய தலைமை செயலாளர் நியமிக்கும் பணியில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பணியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ் ரஞ்சன் அந்த பணியில் இருந்து விடுவித்து மாநில அரசு பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை தமிழக முதல்வர் மத்திய அரசு பணியில் இருந்து விடுவிக்க கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஜனவரி 31 போலியோ சொட்டு மருந்து முகாம்- தமிழக அரசு அறிவிப்பு!!
மத்திய அரசு பணியில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய ராஜிவ் ரஞ்சன் ஏற்கனவே அவர் தமிழக முதல்வர் பொறுப்பின் கீழ் செயல்படும் நெடுஞ்சாலைத் துறையில் நீண்ட நாட்கள் செயலாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் புதிய தலைமை செயலாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்