மார்ச் 9: தமிழக அமைச்சரவை கூட்டம் – முதல்வர் தலைமை.. நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல்!
தமிழகத்தில் மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த நிலையில் 9 ம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம்:
தமிழகத்தில் 2023 – 2024 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 3 ம் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதனையடுத்து அரசின் அனைத்து துறைகளும் நிதிநிலை அறிக்கையை தயார் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்.
இதில் மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து இன்று (பிப்.27) மாலை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.
சாமானிய மக்களை பாதிக்கும் விலை உயர்வு – மார்ச் 1ம் தேதி முதல் இனி திண்டாட்டம் தான்!
இந்த நிலையில் மார்ச் 9ம் தேதி தமிழகத்தின் அமைச்சரவை கூட்டம் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.