Tnpsc Surveyor 2022 தேர்வின் Rank List வெளியிட்டதிலும் குளறுபடி – இப்படி பண்ணா தேர்வர்கள் என்னதான் செய்வார்கள்?
தமிழகத்தில் Field Surveyor மற்றும் Draftsman பணியிடத்திற்கான தேர்வானது கடந்த நவம்பர் மாதம் 6ம் தேதி அன்று நடைபெற்றது. தற்போது இத்தேர்வுக்கான Rank List வெளியான நிலையில் தொடர்ந்து தேர்வர்கள் கொந்தளித்துள்ளனர்.
தரவரிசை
தமிழக அரசு துறைகளில் Field Surveyor மற்றும் Draftsman பணியிடத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma படிப்பில் Civil பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான எழுத்து தேர்வானது நவம்பர் 6ம் தேதி அன்று நடத்தப்பட்டது.
இதில் Field Surveyor, Draftsman என பணியிடத்திற்கு தனித்தனியாக வினாத்தாள் வழங்கப்பட்டது. இத்தேர்வை 29,882 பேர் எழுதி இருந்தனர். இதில் Field Surveyor வினாத்தாள் கடினமாகவும், Draftsman வினாத்தாள் மிகவும் எளிமையாகவும் கேட்கப்பட்டதாக தேர்வர்களிடம் கருத்து பெறப்பட்டது. இதை தொடர்ந்து, இத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த பிப்ரவரி 15ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதில் Field Surveyor தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு குறைவான மதிப்பெண்களையும், Draftsman தேர்வு எழுதிய தேர்வர்கள் அதிக மதிப்பெண்களையும் பெற்றிருந்தனர்.
மார்ச் 9: தமிழக அமைச்சரவை கூட்டம் – முதல்வர் தலைமை.. நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல்!
இந்த நிலையில் இத்தேர்வுக்கான தரவரிசை பட்டியலை தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால் இதனை பார்த்த தேர்வர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்கள். ஏனெனில் Field Surveyor, Draftsman என இரு பணியிடத்திற்கு தனித்தனியாக வினாத்தாள் வழங்கிய நிலையில், இரு தேர்வர்களுக்கும் ஒருங்கிணைந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தேர்வர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் குறைந்த அளவு மதிப்பெண்கள் பெற்ற Surveyor தேர்வர்களுக்கு இது பேரிடியாக விழுந்துள்ளது.