தமிழக தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் – அரசு எச்சரிக்கை!!!
தமிழகத்தில் வரும் திங்கள் கிழமை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் நிலையில், தனியார் பேருந்துகள் இதனை கரணம் காட்டி அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
கூடுதல் கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 26,458 புதிய கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவிற்கு 195 ஆக பதிவாகியுள்ளது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் மே 10 ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து?? – மத்திய கல்வி வாரிய அதிகாரி தகவல்!!
ஊரடங்கின் போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மளிகை, பலசரக்கு, இறைச்சி கடைகள் மட்டும் பகல் 12 மணி வரைக்கும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்படும். பொது போக்குவரத்துக்களான ஆட்டோ, பேருந்து போன்றவையும் இயக்கப்படாது. பொது மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் வெளி ஊர்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கி விட்டனர்.
மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு? மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!
இன்றும், நாளையும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்குவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. அரசு பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். ஆனால் பல தனியார் பேருந்துகளில் இந்த இக்கட்டான சூழலும் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அப்படி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.