தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு? அதிர்ச்சியில் மக்கள்.. அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட போவதாக பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து பொதுமக்கள் அரசிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் பேருந்து கட்டணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பேருந்து கட்டணம்:
தமிழகத்தில் பெரும்பாலும் மக்கள் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலைமை ஏற்ற திமுக அரசு மாநகர அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திட்டம் அமலுக்கு வந்த பிறகு அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.
Follow our Instagram for more Latest Updates
அரசின் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் இதன் மூலம் இதுவரை செலவழித்து வந்த பேருந்து கட்டணத்தொகை தற்போது சேமிக்கப்பட்டு வருவதாகவும் பெண்கள் கருத்து தெரிவித்தனர். மற்றொருபுறம் இந்த இலவச பயணத்திட்டதால் போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தை சந்தித்தது. அதனால் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.
தமிழகத்தில் நடமாடும் காய்கறி அங்காடிகள் திட்டம் – முதல்வர் இன்று துவக்கி வைப்பு!
Exams Daily Mobile App Download
இதனை ஈடு செய்ய பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தப் போவதாக பல்வேறு தகவல்கள் பரவி வந்தது. இது குறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார். தற்போது போக்குவரத்து துறையை நஷ்டத்தில் இருந்து மீட்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.