தமிழகத்தில் நடமாடும் காய்கறி அங்காடிகள் திட்டம் – முதல்வர் இன்று துவக்கி வைப்பு!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வேளாண் துறை சார்பில் நடமாடும் காய்கறி அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இன்று தமிழக முதல்வர் தொடக்கி வைத்துள்ளார். இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
காய்கறி அங்காடி:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு தலைமையேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு அனைத்து துறைகளிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவிக்க உள்ள பரிசுத்தொகுப்பு குறித்து மக்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் இன்று சென்னையில் நடமாடும் காய்கறி அங்காடியை முதல்வர் துவக்கி வைத்தார். கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் போது தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கை விதித்தது. இந்த ஊரடங்கின் காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க வெளியில் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்டம் – ஆசிரியர்களுக்கான பயிற்சி டிச.15 ல் தொடக்கம்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் போன்றவைகள் நடமாடும் வாகனங்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டது. அதே போல தற்போது சென்னையில் வேளாண் துறை சார்பில் நடமாடும் காய்கறி அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 40 லட்சம் செலவில் 2 நடமாடும் காய்கறி அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.