B.ED படிப்பிற்கான விண்ணப்பங்கள் தொடங்கியது !!
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகத்தால் நடத்தப்படும் பிஎட் படிப்பிற்கான விண்ணப்பம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. இது தொடர்பாக திறந்த நிலை பல்கலைகழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியதாவது ,தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2008 ஆம் ஆண்டு முதல் பிஎட் படிப்பை நடத்தி வருகிறது திறந்தநிலை பல்கலைக்கழகம் பிஎட் பட்டப்படிப்பை நடத்தி வரும் தமிழ் நாடு பல்கலைக்கழகங்களில் திறந்தநிலை பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.
இந்த பட்டப்படிப்பு பல்கலைக்கழகமானது இந்திய மறுவாழ்வு கழகத்தின் அங்கீகாரத்துடன் இயங்குகிறது. இந்த படிப்பை படித்து முடித்தால் தமிழ்நாடு அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக
பணி புரியலாம்.
பிஎட் பட்டப்படிபில் செவி திறன் அற்றோர் ,வாய் பேச முடியாதோர் ஆகியோருக்கு சிறப்பு பிரிவு வழங்கப்படுகிறது.இச்சிறப்பு பிரிவினொருக்கு சலுகைகளும் அளிக்கப்படும்.தமிழ்நாடு 10 பிஎட் கல்வி மையங்களை திறந்த நிலை பல்கலைக்கழகம் வாயிலாக நடத்தி வருகிறது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் .திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் பிஎட் பயில விரும்புவோர்கள் என்ற இணையதளத்தை பார்வையிட்டு விண்ணப்பித்து கொள்ளலாம்.
பிஎட் படிப்பிற்க்கான விண்ணப்பம் நிறைவு பெரும் நாள் அக்டோபர் 31 .எனவே தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் பிஎட் பயில விரும்புவோர் விரைவில் விண்ணப்பித்து கொள்ளுமாறு பல்கலைக்கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்