அரியர் தேர்வுகள் தமிழ்நாட்டில் நடத்தப்படும் – ஏ.ஐ.சி.டி.இ தலைவர் உறுதி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்களுக்காக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவர்க்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.
அரியர் தேர்வுகள் ரத்து :
சமீபத்தில் இறுதி பருவ தேர்வுகளை தவிர அரியர் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக தமிழக முதல்வர் அறிவிப்பினை வெளியிட்டார். அரியர் மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண் மூலம் தேர்ச்சி வழங்கப்படும் என்றும், விரும்புபவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செல்லாது என்ற விவகாரம் தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவற்றிற்கு இடையே நடந்தது.
அரியர் தேர்வுகள் தமிழ்நாட்டில் நடத்தப்படும் !
தற்போது ஏ.ஐ.சி.டி.இ தலைவர் அணில் சஹஸ்ரபுத்தே ஒரு செய்தி குறிப்பினை வெளியிட்டு உள்ளார். அதில் “எந்தவொரு தேர்வையும் நடத்தாமலும், மாணவர்களைப் பட்டம் பெறாமலும் மதிப்பெண்கள் வழங்குவதை இது ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகைய மாணவர்கள் தொழில் அல்லது பிற பல்கலைக்கழகங்களால் உயர் கல்விக்கு அங்கீகரிக்கப்பட மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் தமிழகத்தில் அரியர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று ஏ.ஐ.சி.டி.இ தலைவர் உறுதிபட கூறுகிறார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்