அரியர் தேர்ச்சி விவகாரத்தில் அரசின் முடிவில் மாற்றமில்லை ! – தமிழக அரசு அதிரடி
அரியர் தேர்ச்சி விவகாரத்தில் அரசின் முடிவில் மாற்றமில்லை என்று தமிழக அரசின் உயர்கல்வி அன்பழகன் தற்போது ஒரு செய்தி குறிப்பினை வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இறுதியாண்டு பருவ தேர்வு தவிர அனைத்து தேர்வுகளையும் குறிப்பாக அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து கடந்த வாரம் முதல்வர் அரசாணை வெளியிட்டார். இந்த முடிவு மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது. இதனால் மாணவர்களுக்கு அடுத்த கட்ட வாய்ப்புகளும் உருவானது.
ஆனால் இந்த அறிவிப்பு பொறியியல் மாணவர்களுக்கும் பொருந்தும் என்பதனை ஏற்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கடிதம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் தமிழக அரசின் உயர்கல்வி அன்பழகன் தற்போது ஒரு செய்தி குறிப்பினை வெளியிட்டு உள்ளார். அரியர் தேர்ச்சி விவகாரத்தில் அரசின் முடிவில் மாற்றமில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் மறுப்பு தெரிவித்தாலும் மாணவர்களுக்கு வெளியிட்ட அரசின் இந்த முடிவினை மாற்றுவதற்கு இல்லை என்று அமைச்சர் திட்டவட்டமாக குறிப்பிட்டு உள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்