அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது !!!!
தமிழக பல்கலை மற்றும் கல்லூரிகளில் அரியர் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் அறிவிப்பு யுஜிசி மற்றும் AICTE விதிகளுக்கு புறம்பானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்தியா தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் :
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு இறுதிப்பருவம் தவிர்த்து பிற செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர் மாணவர்களும் தேர்வெழுத கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற்றதாக தமிழா அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழக அரசின் இந்த உத்தரவினை எதிர்த்து அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் செப்.30ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு யுஜிசி, AICTE மற்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
தற்போது AICTE சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்பது யுஜிசி மற்றும் AICTE விதிகளுக்கு புறம்பானது. கல்லூரி இறுதிபருவ மாணவர்களுக்கு அரியர் தேர்வுகளை கண்டிப்பாக நடத்த வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தி இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் தமிழக அரசோ இது பேரிடர் சட்ட விதிகள் மற்றும் யுஜிசி நடைமுறைகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்று வலியுறுத்தி வருகிறது. இதனால் அரியர் தேர்வுகள் தேர்ச்சி கிடைக்குமா என மாணவர்கள் மிகுந்த குழப்பம் அடைந்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்