தமிழகத்தில் +2 தனித்தேர்வர்களும் ஆல்பாஸ் – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் தனித்தேர்வர்களாக 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுத விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக ஒரு புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் தேர்ச்சி:
கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டதான 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதுவதற்கு தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது பள்ளிகளில் நேரடியாக பயின்று வரும் அனைத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் போது பி.எப் கணக்கை மாற்றுவது எப்படி? முழு விவரம்!!
அந்த வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த தனித்தேர்வர்களுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்துள்ள 313 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு 17-ன் கீழ் இவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிப்பதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இம்மாணவர்களுக்கான தேர்வு இறுதி முடிவுகளை வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித்துறை சில நடைமுறைகளை தயாரித்தவுடன் முறையாக அறிவிக்கப்படும் எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் தேர்வுகளை எழுதலாம் எனவும், பின்னாட்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆணையின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.