தேர்வு எழுத வராத மாணவர்கள் – அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதன் கடைசி தேர்வு மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் பேருந்துகள் அன்று சரியாக ஓடாததால் 34 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத செல்ல முடியவில்லை.
இதனால் அவர்களுக்கு மட்டும் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கான தேர்வு இன்று (ஜூலை 27) அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 289 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டன. ஆனால் இன்னும் ஊரடங்கானது அமலில் உள்ளதால் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
இந்த தேர்வினை பள்ளிகள் மூலம் 171, மற்றும் தனித்தேர்வர்கள் 572 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களுக்கான விடைத்தாள்களை நாளை முதல் திருத்த உள்ளதாகவும், அதற்கான தேர்வு முடியவர்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |