10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் – தமிழக அரசு அறிவிப்பு!
கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக மூடப்பட்டது. இதனிடையே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை நடத்த முடியாததால் இந்த தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்வதாக அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 23க்கு பிறகு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியாக இருப்பதாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் படி வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் இந்த சான்றிதழ்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
ரூ.12,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
இதனை பிறந்த தேதி மற்றும் மாணவர்களின் பதிவு எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சேவைகள் அனைத்தும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது.