தமிழகத்தில் ஆகஸ்ட் 23க்கு பிறகு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் 23க்கு பிறகு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் ஆகஸ்ட் 23க்கு பிறகு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் ஆகஸ்ட் 23க்கு பிறகு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 23ம் தேதிக்கு பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி 35 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் எவ்வித தொய்வும் இன்றி விரைவாக நடந்தது. இதன் விளைவாக தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

ஆகஸ்ட் 21ம் தேதி அரசு ஊழியர்களுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தற்போது கிட்டத்தட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள் குறித்து மட்டும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஏற்கனவே ஆகஸ்ட் 23 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கு அடுத்தபடியாக ஊரடங்கில் தளர்வுகள் / கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் காலை 11.30 மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

ரூ.12,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

ஏற்கனவே வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா தலங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. இது குறித்த இறுதி முடிவும் இன்று எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!