சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னரே 10,11,12 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ?!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,11,12ம் வகுப்புகள் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னரே தேர்வுகள் நடத்தப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
பள்ளி பொதுத்தேர்வுகள் !
பள்ளியில் பயிலும் 10,11 மற்றும் 12ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு எப்போதும் உரிய காலத்தில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வுகளும் தொடங்கிவிடும். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்று அதனை மாற்றி விட்டது. கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் பாடங்களை பயின்று வரும் நிலையில் அவர்களுக்கான பொதுத்தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்திட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தலுக்கு பின்னரே பொதுத்தேர்வு !
மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேர்தல் மையங்கள் ஆக செயல்பட தேவைப்படும் என்பதனால் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னரே 10,11,12 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |