தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – CEO அறிவிப்பு!!
தமிழக சட்டசபை தேர்தலுக்கு அடுத்த நாள் (07-04-2021) அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நாளை (06-04-2021) நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பணிகளில் அரசு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஈடுபடுவதால் அவர்களை கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு நடக்கும் மறுநாள் (07-04-2021) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலக குறிப்பின் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் 6 அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால், வாக்குச்சாவடிகளில் அலுவலர்களாக பணிபுரிந்து வீடு திரும்ப முடியாமல்,மறுநாள் பள்ளிக்கு வர முடியாத சூழல் ஏற்படும்.
தமிழகத்தில் நாளை வணிக நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை – தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்!!
அந்த ஆசிரியர் மற்றும் பணியாளர்களை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் வாக்குப்பதிவுக்கு மறுநாள் (07-04-2021) விடுமுறை அளிக்கும்படி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளுக்கு பதிலாக மற்றொரு நாளை பள்ளி வேலை நாளாக அறிவிக்கலாம் எனவும் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது’ என கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்