தமிழகத்தில் நாளை வணிக நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை – தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்!!
தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதிபடுத்தும் வகையில், வணிக நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க கோரி தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஊதியத்துடன் விடுமுறை
தமிழகத்தில் நாளை (06-04-2021) சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்குகளை உறுதிப்படுத்தும் விதத்தில் வணிக நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்துள்ளது தமிழ்நாடு வணிகர் சங்க அமைப்பு.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார வெள்ளையன் தெரிவித்துள்ளதாவது, ‘நாமக்கல் மாவட்டத்தின் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் அனைத்து இணைப்பு சங்க நிர்வாகிகள் தங்களது உறுப்பினர்களுக்கு ஓட்டுப்பதிவின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு உத்தரவு!!
அதன்படி ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காகவும் நம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். ஒட்டுச்சாவடிக்கு முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களிக்க வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்