தூத்துக்குடி ஆவின் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப வருகிற திங்கள் கிழமை (ஜனவரி 18) கடைசி நாள் ஆகும்.
ஆவின் நிறுவன வேலை:
தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இருந்து ஆவின் காலிப்பணியிட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Executive (Office) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பணியிடங்களுக்கான கடைசி தேதி வருகிற திங்கள்கிழமை (ஜனவரி 18) ஆகும்.
பள்ளிகளை ஆய்வு செய்ய சிறப்பு குழு – தமிழக அரசு அறிவிப்பு!!
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூட்டுறவு பட்டம் தவிர கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 01.07.2020ம் தேதியில் 10 வருடங்களாவது MPCS அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த பணிகளில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/-வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணிகளுக்கு MPCS பணியாளர்கள் மட்டும் தகுதி, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஜனவரி 18 முதல் அரைநாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் – கல்வித்துறை அறிவிப்பு!!
மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம். இந்த பதவிகளுக்கான OBC/ MBC/ BC பிரிவினருக்கு ரூ.250, SC/ SCA/ ST பிரிவினருக்கு ரூ.100 விண்ணப்ப கட்டணமும் வசூலிக்கப்படும். இதற்கான கடைசி தேதி 18.01.2021 ஆகும். இந்த நிறுவனத்தில் Junior Executive (Office) பணிகளுக்கு 02 காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்