ஜனவரி 18 முதல் அரைநாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் – கல்வித்துறை அறிவிப்பு!!
புதுச்சேரியில் வரும் ஜனவரி 18ம் தேதி முதல் பள்ளிகள் அனைத்து வகுப்புகளுக்கும் அரைநாள் மட்டுமே செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 12.30 வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரைநாள் பள்ளிகள்:
கொரோனா பரவல் காரணாமாக 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் புதுச்சேரியில் கடந்த ஜனவரி 4ம் தேதி முதல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மீண்டும் திறக்கப்பட்டன. பிற மாநிலங்களில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ள நிலையில், புதுச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை என அரைநாள் பள்ளிகள் செயல்படுகிறது.
10 & 12ம் வகுப்புகளுக்கு 50% வரை பாடத்திட்டம் குறைப்பு – ஓரிரு நாட்களில் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகை காரணமாக 4 நாட்கள் (ஜனவரி 17 வரை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் ஜனவரி 18ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல முழுநேரம் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இந்த உத்தரவு திரும்பபெறப்பட்டு உள்ளது.
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் சமையலர் வேலை – விண்ணப்பிக்க இறுதிநாள்!
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 18ம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி காலை 10 மணிமுதல் பிற்பகல் 12.30 மணிவரை அரைநாள் மட்டுமே செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கட்டாயம் இல்லை எனவும், மறுஉத்தரவு வரும்வரை இதனை பின்பற்றுமாறும் கூறப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்