திருப்பதி செல்லவிருக்கும் பக்தர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் டிக்கெட் வெளியீடு தேதி மாற்றம்!
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவு:
ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாதந்தோறும் ஆன்லைன் வாயிலாக டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ. 300 தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் சுமார் 70,366 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நேரத்தில் தேவஸ்தானம் ஆர்ஜித சேவை மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன சேவை டிக்கெட்களை வெவ்வேறு தேதிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதன் படி மாதந்தோறும் 18 ம் தேதி முதல் 20ம் வரை சுப்ரபாதம் தரிசன டிக்கெட் வெளியிப்படும். மேலும் 21ம் தேதி ஆர்ஜித சேவை டிக்கெட் வெளியிடப்படும். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 24ம் தேதி ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download