இன்று முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை – கோவில் நிர்வாகம்!
திருச்செந்தூர் கோவிலில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
தடை விதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்தது. இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா 2ம் அலையை தொடர்ந்து தமிழகத்தின் சில பகுதிகளில் நோய் பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!
அதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கோவில்கள், சுற்றுலா தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின் நோய்த்தாக்கம் குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் பள்ளி, கல்லூரி மற்றும் கோவில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில் திறக்கப்பட்ட நிலையில் முதலில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
Amazon நிறுவனத்தில் சுமார் 1,10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய தகவல்!
அதன் பின் தரிசன நேரம் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து வார இறுதி நாட்களில் கோவில்களில் பக்தர்கள் வரத்து அதிகமாக இருப்பதால் நோய் தொற்று பரவும் விகிதம் அதிகமாகும் என்பதால் வார இறுதிகளில் வழிபாட்டு தலங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை கூறப்பட்டுள்ளது.