தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!

0
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்ததை கருத்தில் கொண்டு கடந்த செப்.1ம் தேதி தொடங்கி 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. சில மாவட்ட பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அப்பள்ளிகள் மட்டும் மூடப்பட்டு குறிப்பிட்ட நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பிற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக தொடக்க, நடுநிலை பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது.

தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் – டிச.31 கடைசி நாள்!

இந்நிலையில் தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்.6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான வேட்புமனு தாக்கலும் முடிவடைந்து உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் முன்னேற்பாடு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தல் நடைபெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது.

CTET தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – நகரங்கள் அறிவிப்பு!

அதன்படி இன்று தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதற்காக காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!