தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் – டிச.31 கடைசி நாள்!
தமிழக அரசு தரும் நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்ள அரசு நல திட்டங்கள் சம்பந்தப்பட்ட அனைத்திலும் ஆதார் எண்ணை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்
மத்திய அரசு வழங்கியுள்ள தனித்துவ அடையாள அட்டை எண்ணான ஆதார் தற்போது பல சேவைகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் ரயில்களில் டிக்கெட்டுகளை பதிவு செய்வது துவங்கி, வங்கி சேவைகள் வரை அனைத்தையும் பெற்றுக்கொள்வதற்கு இந்த ஆதார் அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதே போல சமீப காலங்களாக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள், கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் அனைத்திலும் இந்த ஆதார் அட்டைகள் கேட்கப்படுகிறது.
CTET தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – நகரங்கள் அறிவிப்பு!
அந்த வகையில் மக்களின் அனைத்து தேவைகளுக்கும் இந்த ஆதார் அட்டைகள் தற்போது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் தமிழக அரசு தரும் நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு பொது மக்கள் தங்கள் ஆதார் எண்களை இணைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசின் நலத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் துவங்கி இணையதளங்கள் வரை உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் சொத்து வாங்க திட்டமிடுபவரா நீங்கள்? BOB சூப்பர் அறிவிப்பு!
இதனுடன் நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு ஆதார் எண்களை கட்டாயமாக இணைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் பொது மக்கள் அனைவரும் ஆதார் எண் இணைப்பு செயல்பாடுகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.