
தமிழக அமைச்சரவையில் நடக்கவிருக்கும் அதிரடி மாற்றம்..!! ஆட்டம் போட்ட அமைச்சர்களுக்கு ஆப்பு வைத்த முதல்வர்…!!
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில நாட்களில் அதிரடி மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது கட்சிப்பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும், அவரது அமைச்சர் பதவியை பறிக்கவேண்டும் என தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளது.
மறுபுறம், சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீனில் வெளிவந்த மறுநாளே அமைச்சர் பதவியை ஏற்றார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோட் ” அவருக்கு மெரிட் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படவில்லை. அவர் அமைச்சராக இல்லை என்பதாலே ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்ட ஒரே நாளில் அவர் அமைச்சரானதை ஏற்க முடியாது.அதனால் அவருக்கு ஜாமீன் வேண்டுமா ? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா ?” என்று கேள்வி எழுப்பி வரும் 28 தேதிக்குள் கருத்து தெரிவிக்க சுப்ரீம் கோட் உத்தரவிட்டது. இதனால், அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.. விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்படும்.. டிரம்ப் அறிவித்த முக்கிய தகவல்..!!
எனவே, செந்தில் பாலாஜியின் வாசம் உள்ள மின்சாரத் துறை பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முத்துசாமியிடம் வழங்கப்படலாம் என்றும் மேலும், பொன்முடியின் வசம் உள்ள வனத்துறை வேறு யாரேனும் ஒருவருக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

























