ஊர்க்காவல் படையில் 43 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேனி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்களில் நிரப்ப தகுதியுள்ள இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்த தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
ஊர்காவல் படை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊர் காவல் படை அமைக்கப்பட்டுள்ளது இதன் கீழ் தகுதியும் திறமையும் உள்ள இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் மாவட்ட காவல் துறைக்கு உறுதுணையாக உள்ளனர் தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள ஊர் காவல் படை தற்போது ஆட்கள் தேர்வு நடைபெற்ற வருகிறது.
Join Our WhatsApp Group” for Latest Updates
41 ஆண்கள், 2 பெண்கள் இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் அக். 05,06 ஆகிய இரு தினங்கள் வழங்கப்படும். இவற்றை சரியாக பூர்த்தி செய்து அக்.11 ஆம் தேதி மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகம் தேனி மாவட்டம் – 625531 அனுப்ப வேண்டும்.
SSC தேர்வுகளில் கலந்து கொள்ள இருப்பவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான அரிய வாய்ப்பு!
தகுதி உள்ளவர்கள் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இவர்களுக்கு ஒரு மாதத்தில் 4 நாட்கள் வேலை அளிக்கப்படும். ஒரு நாளைக்கு ரூ. 560 வீதம் ரூ. 2,800 ஊதியமாக வழங்கப்படும்.