அது ஆங்கிலேயர் காலம், தேசத்துரோக சட்டத்தை நீக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது தேசத்துரோக சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது சுதந்திரம் கிடைத்து 72 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த சட்டம் தேவையா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தேசத்துரோக சட்டம்:
இந்தியாவில் சில காலமாக தேசத்துரோக சட்டம், சமூக ஆர்வலர்களுக்கு எதிராகவும், அரசை கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்ய சட்டப்பிரிவு 124 ஏ-யை அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும், இந்த சட்டம் மூலமாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
CBSE 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய இணையதளம் துவக்கம்!
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “இது காலனித்துவ சட்டம். இது ஆங்கிலேயர்களால் சுதந்திரத்தை ஒடுக்க பயன்படுத்தப்பட்டது. மஹாத்மா காந்தி, பால கங்காதர திலக் ஆகியோருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னும் இந்தச் சட்டம் தேவையா?” என கேள்வி எழுப்பினர். மேலும் தேசத்துரோக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவது குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, “தேசத்துரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை, மரத்தை வெட்ட தச்சரிடம் ரம்பத்தைக் கொடுத்தால், அவர் காட்டையே அளிப்பதுடன் ஒப்பிடலாம்” என தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் கூறுகையில், இந்த சட்டத்தை முழுவதுமாக நீக்க தேவையில்லை எனவும், தவறுகள் மட்டுமே சரி செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். இது குறித்து அனைவரின் கருத்துக்களை கேட்க வேண்டும் எனவும், இந்த மனு குறித்து மத்திய அரசு விரிவாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.