தமிழகத்தில் 100% தாழ்தள பேருந்துகளை இயக்க சாத்தியமில்லை – போக்குவரத்து துறை விளக்கம்!!
தமிழகத்தில் 100% தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டும் என்று வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணையின் போது, போக்குவரத்து துறை அளித்துள்ள விளக்கத்தை பற்றி பார்ப்போம்.
தாழ்தள பேருந்து:
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதிதாக 1,017 பேருந்துகளை வாங்குவது குறித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணையில், தாழ்தள பேருந்துகள் குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. அதனால் தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த மனுவில் தமிழகத்தில் 100% தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Follow our Twitter Page for More Latest News Updates
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக போக்குவரத்து துறை சார்பாக கூறியதாவது, தமிழகத்தில் 100 சதவீத தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என அறிவித்துள்ளது. ஏனெனில் தாழ்தள பேருந்துகளை இயக்குவதற்கு தமிழகத்தில் சாலை வசதிகள் இல்லை என்றும் தாழ்தள பேருந்து வாங்குவதற்கு ரூ.80 லட்சம் வரை அரசுக்கு செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Alphabet நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் – CEO வெளியிட்ட ஷாக் அறிவிப்பு!
ஆனால் சாதாரண பேருந்து வாங்குவதற்கு 40 முதல் 45 லட்ச ரூபாய் தான் செலவு ஆகிறது என குறிப்பிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தாழ்தள பேருந்துகளை இயக்க 1 கிமீக்கு ரூ.41 வரை செலவு ஏற்படும் என்றும் ஆனால், சாதாரண பேருந்தை இயக்குவதற்கு இதை விட குறைவான கட்டணம் மட்டுமே ஆகும் என்றும் போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.