ஆதார் அட்டைதாரர்கள் செப்டம்பர் 14 க்குள் இத கண்டிப்பா செஞ்சுருங்க.., இல்லனா நீங்க தா வருத்தப்படுவீங்க!!
இந்தியாவில் வங்கி கணக்கு தொடங்குவது முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் ஆகும். அதனால் ஆதாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பது அவசியம் ஆகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆதார் கார்டை அவ்வப்போது அப்டேட் செய்து கொள்வதும் அவசியமான ஒன்றாகும்.
இந்த நிலையில் ஆதார் அட்டையை வரும் செப்டம்பர் 14 க்குள் புதுப்பிக்காவிட்டால் ரத்து செய்யப்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் உலா வந்தன. தற்போது இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் UIDAI ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அப்டேட் செய்யாவிட்டால் ஆதார் அட்டைகள் எதுவும் ரத்து செய்யப்படாது, ஆதார் அட்டையில் கட்டணமின்றி திருத்தங்கள் செய்து கொள்ள வரும் செப்டம்பர் 14ஆம் தேதி வரை அவகாசம், அதற்கு மேல் திருத்தங்கள் செய்ய கட்டணம் வசூலிக்கப்படும்.
























