நாட்டின் முதல் எம்ஆர்என்ஏ தடுப்பூசி – இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல்!

0
நாட்டின் முதல் எம்ஆர்என்ஏ தடுப்பூசி - இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல்!
நாட்டின் முதல் எம்ஆர்என்ஏ தடுப்பூசி - இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல்!
நாட்டின் முதல் எம்ஆர்என்ஏ தடுப்பூசி – இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல்!

கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் இந்தியாவில் தளர்த்தப்பட்டன. ஆனால், எதிர்பாராத விதமாக கொரோனா தற்போது தீவிரமாக பரவி வருகிறது. மேலும், நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உலக சுகாதாரத் துறை திணறி வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் ‘எம்.ஆர்.என்.ஏ.’ தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

‘எம்.ஆர்.என்.ஏ.’ தடுப்பூசி:

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் வேகம் எடுக்கத் தொடங்கிய கொரோனாவை தடுக்கும் வகையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டு நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தல் என மத்திய மாநில அரசுகளின் கடும் முயற்சியினால் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்து வந்தது. இருப்பினும் தற்போது மீண்டும் நோய்த் தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு மீண்டும் தடுப்பு விதிமுறைகளை கையில் எடுத்து உள்ளன.

Exams Daily Mobile App Download

இதை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாட்டின் முதல் ‘எம்.ஆர்.என்.ஏ.’ தடுப்பூசியை மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள ஜெனோவா பயோபார்மசியூட்டிகல்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. மேலும், இந்த தடுப்பூசிக்கு ‘ஜெம்கோவாக்-19’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் முடிந்துள்ளன. குறிப்பாக, அவை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் வழங்கப்பட்டு, மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இதில் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, சகித்துக்கொள்ளக்கூடியது, நோய் எதிர்ப்புத்திறன் கொண்டுள்ளது என்று தெரிய வந்துள்ளதாக ஜெனோவா பயோபார்மசியூடிக்கல்ஸ் நிறுவனம் கூறுகிறது. இதன் அடிப்படையில் ‘ஜெம்கோவாக்-19’ தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதலை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கியுள்ளது.

தமிழக பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – உயர்நீதிமன்ற கிளை முக்கிய அறிவிப்பு!

1.’எம்.ஆர்.என்.ஏ.’ என்பது ‘மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.’ என்பதன் சுருக்கம் ஆகும்.

2.’மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.’ என்பது செல்கள், புரதங்களை உருவாக்கும் செயல்முறையில் ஈடுபடுகிற ஒற்றை இழை ஆர்.என்.ஏ. வகை ஆகும்

3. ‘எம்.ஆர்.என்.ஏ.’ தடுப்பூசிகள் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!