
“நெல்லை மக்களுக்கு ஓர் நற்செய்தி…!!” அடிதூள் அசத்தல் திட்டமெல்லாம் உங்க ஊரை தேடி வரப்போகுது..!! முதல்வர் அறிவிப்பு
அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லையில் இன்று (07.02.2025) தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரூ. 167 கோடி மதிப்பில் முடிவுற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் ரூ. 309 கோடி மதிப்பில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின், நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படும் என்று அறிவித்தார்.
List of Waterfalls and Rivers in India State Wise in Tamil – PDF Download
மேலும், நெல்லையில் உள்ள அம்பாசமுத்திரம் சாலையானது 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார் . அதன்பின், நெல்லை நாங்குநேரி பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல், நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் புதிதாக ‘Y’ வடிவ ரயில்வே மேம்பாலம் ரூ. 120 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பாபநாசம் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

























