அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் பண பலன்களை உயர்த்தி மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயணப்படி உயர்வு:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி, நிலுவைத்தொகை போன்றவைகளை வழங்கி வருகிறது. மறுபுறம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
UPSC CMS 2023 ADMIT CARD OUT – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அதன்படி ஊழியர்களுக்கான பயணப்படி 30% அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கான கொடுப்பனவு ரூ. 2000 முதல் ரூ. 3000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வீடு கட்ட விரும்பும் அரசு ஊழியர்களுக்கான முன்பணம் . 20 லட்சத்திலிருந்து 30 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஊழியர்களின் குழந்தைகளுக்கான திருமணத்திற்கு வழங்கப்படும் முன்பணம் ரூ. 4 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.