தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முடிவு – பாதிக்கும் மாணவர்கள்!!அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் டெட் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் போராட்டம்:
தமிழகத்தில் அரசு சட்டமன்ற தேர்தலில் அறிவித்தபடி பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் எனவும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் எனவும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வுகள் இல்லாமல் நேரடி நியமனம் வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தனர்.
Join Our WhatsApp Group” for Latest Updates
இந்நிலையில், அரசு கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்றாமல் எங்களை தண்டிப்பது ஏன் என ஆசிரியர்கள் கொந்தளித்த நிலையில் கைது செய்த ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டனர். பகுதிநிலை ஆசிரியர்கள் மற்றும் டெட் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இவர்களுக்கு பதிலாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட தயாராகியுள்ளனர்.
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? முழு விவரங்கள் உள்ளே!
அக்டோபர் 9ம் தேதி காலாண்டு விடுமுறை முடிவடைந்து இடைநிலை மாணவர்களுக்கு பள்ளி திறக்க இருக்கும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்த இருக்கின்றனர். இதனால், மாணவர்களின் படிப்பு வெகுவாக பாதிக்கப்படும். இதற்கு, பிறகாவது ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.